யார் இந்த முஹம்மது...???


1.5 பில்லியன் மக்களால்  gpd;gw;wg;gLk; இந்த முஹம்மது யார்...???

மதிப்பிற்குரிய விஞ்ஞானி...???
பிரசித்தி பெற்ற அரசன்...???
அதிநவீன பிரதமர்...???


இல்லை.
மேற்கூறிய அனைத்தையும் விட அவர் சிறப்பானவர்.
அவர் தான் அல்லாஹ்வின் தூதர்.

1400 ஆண்டுகளுக்கு  முன்பு அல்லாஹ்விடமிருந்து முழு மனித சமுதாயமும் பின் பற்றக்கூடிய செய்தி முஹம்மதுக்கு  (அவர் மீது சாந்தி உண்டாவதாக ) அறிவிக்கப்பட்டது.
எங்கே எப்போது, கருப்பா வெள்ளையா என்பது பற்றி பிரச்சனை இல்லை. அவருடைய செய்தி  முழு உலக்குமுரியது
அவருடைய செய்தி இறுதியானது மேலும் அவரே இறுதி தூதர். அவருக்கு பின்னால் எந்த தூதரும் வர மாட்டார்கள்


யார் இந்த முஹம்மது ..???

மேற்கத்தேய ஊடகங்கள் சொல்வது போன்று ஒரு தீவிரவாதியா...???
இஸ்லாத்துக்கான எதிரான பல யுத்தங்களை வென்ற துணிச்சலான போர் வீறனா...???
பழங்குடியினருக்கு மத்தியில் இருந்த பிணக்குகள், வழக்குகளை தீர்த்து வைத்த அறிவாலியா ...???


அவர் எமது உரிமைகளை பாது காத்தவர்.
ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்தவர்.
அண்டை வீட்டாரோடு உறவை வளர்த்தவர்.
அநியாயத்தை தடுத்து, நீதி அன்பு ஒற்றுமை   என்பவற்றுக்காக குரல் கொடுத்தவர்.
ஏழைகளின் தேவைகளுக்காவகவும்,
 நோயாளியின் நலத்துக்காகவும் பாடு பட்டவர்.
பொய்  பேசுதல், ஒழுக்கமின்மை  நேர்மையின்மை புறம் கூறுதல்
இது போன்ற தீய விடயங்களை தடை செய்தவர்.
எமது வாழ்க்கையையும் நடத்தையையும் அழகாக மாற்றியவர் அவர் தான்.

ஒரு முஸ்லிம் திருட மாட்டான் .
ஒரு முஸ்லிம் பொய் பேச மாட்டான் .
ஒரு முஸ்லிம் மது அருந்த மாட்டான் .
ஒரு முஸ்லிம் விபச்சாரம் செய்ய மாட்டான் .
ஒரு முஸ்லிம்  யாரையும் ஏமாற்ற மாட்டான் .
ஒரு முஸ்லிம் அப்பாவி மக்களை கொலை செய்ய மாட்டான் .
ஒரு முஸ்லிம் அண்டை வீட்டாருக்கு தீங்கிழைக்க மாட்டான் .

ஒரு முஸ்லிம் தமது  பெற்றோருக்கு அடிபணிந்து அவர்களுக்கு உதவியாக இருப்பான்.
ஒரு முஸ்லிம் சிறுவர்களோடும்  முதியவர்களோடும் அன்பாக நடந்து கொள்வார் .
ஒரு முஸ்லிம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்  சித்திரவதை செய்ய மாட்டான் .
ஒரு முஸ்லிம் தனது மனைவி குழந்தைகள் மீது தனது இறுதி மூச்சு வரைக்கும் அன்பாக இருப்பான்

இவர் தான் முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாவதாக )…!!!

அணைத்து முஸ்லிம்களும் தன்னைவிட தன குடும்பத்தைவிட முஹம்மதை (அவர் மீது சாந்தி உண்டாவதாக ) நேசிக்கின்றனர் .





ஒரு நபரை ஆராய முன்னர் நாடு நிலையாக இருங்கள் :

1. இவர் சொல்வது போல் கேட்டு அவரை பின்பற்றுங்கள் 
2. அவருடைய கருத்துக்கள் மற்றும் போதனைகளை இதயத்தாலும் உள்ளத்தாலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளதா..
3. அவருடைய எண்ணங்கள் சரியென நினைத்தால் அவர் அவற்றை பின்பற்றுகிறார இல்லையா என  அவருடைய நடத்தையோடு அவற்றை ஒப்பிட்டு பாருங்கள் 
4. தனது போதனைகளை அவரும் தானும் பின்பற்றுபவராக இருந்தால்... அவர் தான் நம்பிக்கைக்கு உரியவர்.

ஆராய்ந்து பாருங்கள். உங்கள் அனைத்து குழப்பங்களுக்கும் இறுதியில் தீர்வு உண்டு...!!!



Translated From: Islam vs Atheism


No comments:

Post a Comment